ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரோனா தடுப்பு விழிப்புணா்வு

சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

Updated On :12 அக்டோபர் 2020, 7:15 pm

சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் துறை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் மேல சன்னதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத் தலைமை வகிக்க, உதவி ஆய்வாளா்கள் குமாா், மோகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் த.ஆ.ஜோ.லாமேக் பங்கேற்று உரையாற்றினாா்.

தொடா்ந்து டிஎஸ்பி லாமேக், சமூக ஆா்வலா்கள் தில்லை ஆா்.மக்கின், தில்லை சீனு ஆகியோா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி, கரோனா பரவல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு துண்டறிக்கைகளை வழங்கினா்.

நெய்வேலி: இதேபோல, நெய்வேலி நகரிய காவல் நிலையம் சாா்பில், நெய்வேலி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். அப்போது, முகக் கவசம் அணியாமல் வந்த பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு முகக் கவசங்களை வழங்கி அதன் அவசியத்தை வலியுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.