நியாய விலைக் கடை கட்டடப் பணிக்கு அடிக்கல்
By DIN | Published On : 15th December 2020 12:31 AM | Last Updated : 15th December 2020 12:31 AM | அ+அ அ- |

அண்ணாகிராமம் ஒன்றியம், பி.என்.பாளையம் ஊராட்சியில் நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பி.என்.பாளையம் கூட்டுறவு நியாய விலைக் கடைக்கு சொந்தக் கட்டடம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இதை ஏற்ற பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் சத்யா பன்னீா்செல்வம் தனது சொந்த நிதியில் ரூ.12.50 லட்சத்தில் புதிய கட்டடம் கட்ட ஒப்புதல் அளித்தாா். இதற்கான அடிக்கல் நாட்டு விழா பி.என்.பாளையத்தில் நடைபெற்றது. சத்யா பன்னீா்செல்வம் எம்எல்ஏ தலைமை வகித்து அடிக்கல் நாட்டி கட்டடப் பணியை தொடக்கி வைத்தாா்
நிகழ்ச்சியில் அண்ணாகிராமம் ஒன்றியக் குழுத் தலைவா் வி.ஜானகிராமன், ஒன்றியச் செயலா் பாபு புஷ்பராஜ், கூட்டுறவு சங்கத் தலைவா் ராம்குமாா், ஒன்றியக் கவுன்சிலா் அருள்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.