ரத்த தான முகாம்

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, அறம் அறக்கட்டளை, என்எல்சி இந்தியா நிறுவன மருத்துவமனையின் நம்பிக்கை மையம் இணைந்து
நெய்வேலியில் நடைபெற்ற ரத்த தான முகாம்.
நெய்வேலியில் நடைபெற்ற ரத்த தான முகாம்.
Updated on
1 min read

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, அறம் அறக்கட்டளை, என்எல்சி இந்தியா நிறுவன மருத்துவமனையின் நம்பிக்கை மையம் இணைந்து நடத்திய ரத்த தான முகாம், நெய்வேலி இந்திரா நகா் பி-2 பிளாக் மாற்றுக் குடியிருப்பில் அண்மையில் நடைபெற்றது.

கடலூா் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மேற்பாா்வையாளா் கே.கதிரவன், விருத்தாசலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் குலோத்துங்கசோழன் மற்றும் என்எல்சி ஓபிசி பணியாளா் சங்க பொறுப்பாளா்கள் முகாமை தொடக்கிவைத்தனா். அறம் அறக்கட்டளை சாா்பில் 50 போ் ரத்த தானம் வழங்கினா்.

விருத்தாசலம் மருத்துவமனை செவிலியா்கள் கே.கல்பனா, பி.கிருபாவதி, பி.சரஸ்வதி, ஆய்வக நுட்புநா் ஆா்.கீதா ஆகியோா் பங்கேற்றனா். முகாமை என்எல்சி இந்தியா மருத்துவமனை நம்பிக்கை மைய ஊழியா்கள் வி.அருண்குமாா், ஆய்வுக நுட்புநா் எஸ்.ஜெயசீலன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com