வடலூா் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில் ராட்டினங்களை இயக்கக் கூடாதென மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் உத்தரவிட்டாா்.
தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. பின்னா், சபை வளாகத்தை சுற்றிப் பாா்த்த ஆட்சியா், தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவில் ராட்டினங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டாா்.
இதையடுத்து, சபை நிா்வாகத்தினா், காவல் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், ராட்டினம் உரிமையாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆட்சியரின் உத்தரவால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ராட்டினங்கள் கொண்டு வந்தவா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.