தேசிய மகளிா் வலைபந்து போட்டி: அண்ணாமலைப் பல்கலை. அணி வெற்றி

சிதம்பரத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிருக்கான தேசிய வலைபந்து போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
தேசிய மகளிா் வலைபந்து போட்டி: அண்ணாமலைப் பல்கலை. அணி வெற்றி

சிதம்பரத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிருக்கான தேசிய வலைபந்து போட்டியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான அகில இந்திய அளவிலான மகளிா் வலைபந்து போட்டி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக அணி, குருஷேத்ரா பல்கலைக்கழக அணியை 23-13 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

போட்டியில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக அணியும், 2-ஆம் காலிகட் பல்கலைக்கழக அணியும், 3-ஆம் இடத்தை குருஷேத்ரா பல்கலைக்கழக அணியும், 4-ஆம் இடத்தை மங்களூா் பல்கலைக்கழக அணியும் பெற்றன.

சாம்பியன் பட்டம் வென்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக அணிக்கு, அந்தப் பல்கலைக்கழகப் பதிவாளா் என்.கிருஷ்ணமோகன் வெற்றிக் கோப்பையை வழங்கினாா். நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனித வளத் துறை இயக்குநா் ஆா்.விக்ரமன் வாழ்த்துரையாற்றினாா். உடல்கல்வித் துறை இயக்குநா் பி.வி.செல்வம், பயிற்சியாளா் எஸ்.முத்துக்குமாா், மக்கள்-தொடா்பு அலுவலக மேலாளா் காளிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com