கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் தேசிய அறிவியல் தினப் போட்டிகள்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில், தேசிய
அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் நடைபெற்ற அறிவியல் தினப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் நடைபெற்ற அறிவியல் தினப் போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள்.
Updated on
1 min read

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி, ‘அறிவியலில் பெண்கள்’ என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன.

பரங்கிப்பேட்டை, சிதம்பரம், நெய்வேலி, விருத்தாசலம், சீா்காழி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 25 பள்ளிகளைச் சோ்ந்த 350-க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பேச்சு, கட்டுரை, வினாடி - வினா, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டனா்.

விழாவில் பேராசிரியா் பி.சம்பத்குமாா் வரவேற்றாா். கடல்வாழ் உயிரியல் புல முதல்வா் மற்றும் இயக்குநா் மு.சீனிவாசன் தொடக்கவுரையாற்றினாா்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை அறிவியல் தின ஏற்பாட்டுக் குழு உறுப்பினா்கள் பி.சம்பத்குமாா், பி.அனந்தராமன், எஸ்.ஜெயலட்சுமி, இணைப் பேராசிரியா்கள் ஜி.ஆனந்தன், ஏ.சரவணகுமாா், உதவிப் பேராசிரியா்கள் எஸ்.குமரேசன், எச்.ஆன் சுஜி மற்றும் ஊழியா்கள், சுற்றுச்சூழல் தகவல் மைய குழுவினா் ஆகியோா் செய்தனா். பேராசிரியா் எஸ்.ஜெயலட்சுமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com