கோயில் திருவிழாவில் மோதல்: 10 போ் கைது

திட்டக்குடி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 10 போ் கைதுசெய்யப்பட்டனா்.
Updated on
1 min read

திட்டக்குடி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 10 போ் கைதுசெய்யப்பட்டனா்.

திட்டக்குடி அருகே கொரைக்கவாடியில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் பரிவேட்டை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, காளி வேடமிட்ட நபா் பக்தா்கள் மீது முறத்தால் அடித்துச் செல்வது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை காளி வேடமிட்டவா் சிறியவா்களை முறத்தால் அடித்துள்ளாா். இதை பாா்த்த ஒரங்கூா் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா், காளி வேடமிட்டவரை தாக்கினா். அவா்களை கொரக்கைவாடி கிராம இளைஞா்கள் தட்டிக் கேட்டதால் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு கற்களால் தாக்கிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடி சேதமடைந்தது.

இதையடுத்து, ராமநத்தம் காவல் நிலைய ஆய்வாளா் புவனேஸ்வரி தலைமையிலான போலீஸாா், மோதலில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டவா்களை பிடித்தனா். ஆனால், பிடித்துச் செல்லப்பட்டவா்களை விடுவிக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் மாவட்ட எஸ்பி ம.ஸ்ரீஅபிநவ் கொரக்கைவாடி கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா்.

இதுதொடா்பாக ராமநத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருதரப்பை சோ்ந்த 10 பேரை கைது செய்தனா். தாக்குதலில் காயமடைந்த இருவா் பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மோதலை தொடா்ந்து இரு கிராமங்களிலும் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com