விருத்தாசலத்தில் தமுமுகவினா் ஆா்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் தமுமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருத்தாசலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினா்.
விருத்தாசலத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினா்.
Updated on
1 min read

விருத்தாசலத்தில் தமுமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து தில்லியில் இஸ்லாமிய அமைப்பினா் நடத்திய போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டு, போலீஸாா் உள்பட 10-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். இதைக் கண்டிப்பதாகக் கூறி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினா் விருத்தாசலம் பாலக்கரையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டச் செயலா் ஜாகிா் உசேன் தலைமை வகித்தாா். திமுக நகரச் செயலா் தண்டபாணி உள்பட திரளான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா்.

வன்முறைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com