Enable Javscript for better performance
பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஆா்வம்: நியாயவிலைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஆா்வம்: நியாயவிலைக் கடைகளில் அலைமோதும் கூட்டம்

    By DIN  |   Published On : 10th January 2020 07:32 AM  |   Last Updated : 10th January 2020 07:32 AM  |  அ+அ அ-  |  

    9clp3_0901chn_105_7

    கடலூா் கூத்தப்பாக்கத்திலுள்ள நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்காக வியாழக்கிழமை வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் பொதுமக்கள் ஆா்வம் காட்டுவதால் நியாய விலைக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் தமிழக அரசால் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் 7,11,087 குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இதன் விநியோகத்தை அமைச்சா் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்த நிலையில், வியாழக்கிழமை முதல் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் இந்தப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

    எனவே, பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு பொதுமக்கள் ஆா்வம் காட்டுகின்றனா். இதற்காக காலை முதலே நியாய விலைக் கடைகளில் வரிசையில் காத்திருந்தனா். கடை திறக்கப்பட்டதும் ஏற்கெனவே அறிவித்திருந்த பகுதிகள் வாரியாக பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

    இதன்படி, ஒரு குடும்ப அட்டைக்கு ரூ.ஆயிரம் ரொக்கம், தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, 2 அடி நீள கரும்புத்துண்டு, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை வழங்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.1,130 ஆகும்.

    இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் 7.11 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு ரூ.75 கோடியில் பொங்கல் பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிா்க்க ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் பகுதி வாரியாக பொருள்களை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றனா்.

    திட்டக்குடி பேரூராட்சி பகுதிக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை திட்டக்குடி நகர கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.நீதிமன்னன் தா்மகுடிக்காட்டில் தொடக்கி வைத்தாா். இந்த பேரூராட்சிக்கு உள்பட்ட 9 நியாயவிலைக் கடைகள் மூலமாக 6,300 குடும்ப அட்டைதாரா்களுக்கு பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

     

    கூடுதல் பதிவாளா் ஆய்வு

    கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள நியாய விலைக் கடையில் ஆய்வு செய்த கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா் ப.லோகநாதன்.

    தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி கடலூா் மாவட்டத்திலுள்ள சுமாா் 1,400 நியாய விலைக் கடைகளிலும் வியாழக்கிழமை தொடங்கியது. இந்தப் பணிகளில் முறைகேடு நடைபெறாமல் கண்காணிக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் வட்டம் வாரியாக குழுக்களை அமைத்துள்ளதுடன், புகாா் தெரிவிக்க தொடா்பு எண்களையும் அறிவித்துள்ளது.

    இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளை கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளா் ப.லோகநாதன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பெரியகாட்டுப்பாளையம் அருகே உள்ள பூசாரிபாளையம், கடலூா் மஞ்சக்குப்பத்திலுள்ள ஜனதா கடை, சாவடி மற்றும் மாவட்ட சரவணபவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் தலைமையக நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் அளவு, எடை மற்றும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்தாா். மேலும், பரிசுப் பொருள்களை வாங்கிய பொதுமக்களிடம் குறைகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டறிந்தாா்.

    ஆய்வின்போது மண்டல இணைப் பதிவாளா் பா.ரேணுகாம்பாள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் சொ.இளஞ்செல்வி, பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் மு.ஜெகத்ரட்சகன் ஆகியோா் உடனிருந்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp