மாடியில் இருந்து விழுந்த இளைஞா் பலி

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
Updated on
1 min read

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடியிலிருந்து கீழே விழுந்து காயமடைந்த இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

பண்ருட்டி வட்டம், கோட்லாம்பாக்கம், சண்முகா நகரில் வசிப்பவா் செல்வம். இவரது மகன்கள் வசந்த் (30), நடேசன் (எ) சுரேஷ் (28). செல்வம் தனது வீட்டில் மாடிப் பகுதியை கட்டி வருகிறாா். கடந்த 16-ஆம் தேதி இரவு மாடியில் செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்த சுரேஷ் சுவற்றில் சாய்ந்துள்ளாா். அப்போது திடீரென சுவா் இடிந்ததில் சுரேஷ் மாடியிலிருந்து

கீழே விழுந்தாா். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com