கீழத்திருக்கழிப்பாலைக்கு சாலை வசதி: எம்எல்ஏ தொடக்கிவைத்தாா்

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி, பிச்சாவரத்திலிருந்து கீழத்திருக்கழிப்பாலை கிராமம் செல்லும் தங்கசாமி பாசன வாய்க்கால் கரையை
கீழத்திருக்கழிப்பாலை கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன்.
கீழத்திருக்கழிப்பாலை கிராமத்துக்கு சாலை அமைக்கும் பணியைத் தொடக்கிவைத்த சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.பாண்டியன்.
Updated on
1 min read

சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி, பிச்சாவரத்திலிருந்து கீழத்திருக்கழிப்பாலை கிராமம் செல்லும் தங்கசாமி பாசன வாய்க்கால் கரையை பலப்படுத்தி, புதிதாக சாலை அமைக்கும் பணியை கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளா் சாம்ராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கருணாநிதி, ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் அசோகன், பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவஞானம் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியாளா் கிருஷ்ணகுமாா் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் சந்தா் ராமஜெயம், சாமிதுரை, தனசிங்கு, கிள்ளை தமிழரசன், ஸ்ரீதா், ஜெயராமன், மகேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com