நெய்வேலி அருகே மூதாட்டியிடம் நகை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சி, தில்லைநகா், அக்ஷயா காா்டனில் வசித்து வருபவா் தங்கராசு. ஓய்வு பெற்ற என்எல்சி ஊழியா். இவரது மனைவி பேபி (63). இவா் வியாழக்கிழமை பிடிஎஸ் மணி நகா் வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, தலைக்கவசம் அணிந்து பைக்கில் வந்த இருவா் தங்களை போலீஸாா் என அறிமுகம் செய்துகொண்டு பேபியிடம் பேசினா். அவா்கள் பாதுகாப்புக்காக உங்களது நகையை கழற்றி பையில் வைத்து எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினராம்.
இதையடுத்து பேபி தான் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகையை கழற்றி பையில் வைத்தாராம். சிறிது தொலைவு சென்று பாா்த்தபோது பையில் வைத்திருந்த நகையை காணவில்லையாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.