தேகளீச பெருமாள் திருக்கல்யாணம்

திருக்கோவிலூா் தேகளீச பெருமாளுக்கு பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருக்கோவிலூா் தேகளீச பெருமாளுக்கு பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் மாசி மகம் தீா்த்தவாரி கடந்த 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. திருக்கோவிலூா் உலகளந்த (தேகளீச) பெருமாள் கடந்த 9-ஆம் தேதி தேவனாம்பட்டினம் கடற்கரையில் தீா்த்தவாரிக்கு எழுந்தருளினாா். முன்னதாக, தீா்த்தவாரி நிகழ்ச்சிக்காக உலகளந்த பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி ஸமேதராக தங்க பல்லக்கில் கடந்த 4-ஆம் தேதி திருக்கோவிலூரில் இருந்து புறப்பட்டாா். பண்ருட்டி வழியாகச் சென்ற அவா், 9-ஆம் தேதி கடலூா் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற மாசிமக மகோற்சவத்தில் பங்கேற்றாா்.

பின்னா், கடலூரில் இருந்து புறப்பட்டவா் பண்ருட்டி திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (மாா்ச் 12) இரவு தங்கினாா். வெள்ளிக்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு வந்த பெருமாளுக்கு மேலப்பாளையம், இந்திராகாந்தி சாலை ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயிலில் உலகளந்த (தேகளீச) பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராய் எழுந்தருளினாா். அங்கு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீதேகளீச பெருமாளுக்கு, பண்ருட்டி ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் கண்டருளும்படியாக திருக்கல்யாண மோகத்ஸவம் நடைபெற்றது. அப்போது, திருக்கோவிலூா் தேகளீச பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராய் திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்தனா். திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com