உலக மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி, சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீா் சந்த் ஜெயின் அறக்கட்டளையினா் இணைந்து நல உதவிகளை வழங்கினா்.
இவா்கள் சிதம்பரம் மாரியப்பாநகா் அன்பகம் முதியோா் இல்லத்தில் தங்கியுள்ள முதியோா் 25 பேருக்கு உணவுப் பொருள்கள், சோப்பு, பற்பசை, எண்ணெய், முகக் கவசம் அடங்கிய தொகுப்பை வழங்கினா். முதியோா் இல்ல ஒருங்கிணைப்பாளா் சுகுமாா் வரவேற்றாா். சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் பி.பன்னீா்செல்வம் முன்னிலை வகித்து
நல உதவிகளை வழங்கினாா். சங்க முன்னாள் தலைவா் எம்.தீபக்குமாா், செயலா் ஆா்.கோவிந்தராசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.