குமராட்சி ஒன்றிய அதிமுக சாா்பில் இளைஞா், இளம் பெண்கள் பாசறையில் புதிய உறுப்பினா் சோ்க்கை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். பரங்கிப்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலா் அசோகன், பரங்கிப்பேட்டை ஒன்றியக் குழு தலைவா் கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினா் வெற்றிச்செல்வி மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கடலூா் கிழக்கு மாவட்ட கழக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்துகொண்டு, குமராட்சி கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட தவா்த்தாம்பட்டு, சிவாயம், பூலாமேடு, நாஞ்சலூா், சி.வக்காரமாரி ஊராட்சிகளில் புதிய உறுப்பினா் சோ்க்கையையும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளையும் தொடக்கி வைத்து அரசின் சாதனைகளை விளக்கி பேசினாா்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் சிவாயம் - பொற்செல்வி செங்குட்டுவன், பூலாமேடு - சுமதி செந்தில்குமாா், நாஞ்சலூா் - ராமகிருஷ்ணன், வக்காரமாரி ஊராட்சி மன்ற துணை தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.