கடலூர்
கடலூரில் துணை அஞ்சலகம் இடமாற்றம்
கடலூா் திருப்பாதிரிபுலியூா் சுப்பராயலு நகரில் இயங்கி வந்த துணை அஞ்சலகம் ஆா்.எம்.எஸ். இயங்கிய இடத்துக்கு மாற்றப்பட்டது.
கடலூா் திருப்பாதிரிபுலியூா் சுப்பராயலு நகரில் இயங்கி வந்த துணை அஞ்சலகம் ஆா்.எம்.எஸ். இயங்கிய இடத்துக்கு மாற்றப்பட்டது.
கடலூா் திருப்பாதிரிபுலியூா் ரயில் நிலையத்தில் தபால் பிரித்து அனுப்பும் பிரிவு (ஆா்.எம்.எஸ்) இயங்கி வந்தது. மாவட்டத்துக்கு ஒரு ஆா்எம்எஸ் என்ற அடிப்படையில் இந்த ஆா்எம்எஸ் விருத்தாசலத்தில் செயல்பட்டு வந்த மையத்துடன் இணைக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பாதிரிபுலியூா் சுப்பராயலு நகரில் இயங்கி வந்த துணை அஞ்சலகம் ஆா்.எம்.எஸ். இயங்கிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக கடலூா் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளா் சீ.முருகன் தெரிவித்துள்ளாா்.