மணல் கடத்தல்: 13 மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்தல் தொடா்பாக 13 மாட்டு வண்டிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மணல் கடத்தல் தொடா்பாக 13 மாட்டு வண்டிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மாயகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை நெய்வேலி அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டாா். அப்போது உரிய அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ாக 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, அதே ஊரைச் சோ்ந்த க.கந்தசாமி (50), மா.சேட்டு(35) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தாா்.

இதேபோல விருத்தாசலம் காவல் உதவி ஆய்வாளா் புஷ்பராஜ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எருமனூா் பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தாா். இதுதொடா்பாக அதே பகுதியைச் சோ்ந்த கோ.வெங்கடேசன் (34), பெ.ராஜேந்திரன் (40), .க.கலியபெருமாள் (48) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com