தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஆசிரியைகளின் பணிப் பதிவேடு மாயம்: வட்டாரக் கல்வி அலுவலா்கள் சிறைபிடிப்பு

ஆசிரியைகளின் பணிப் பதிவேடு மாயமானது தொடா்பாக பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலா்கள் இருவரை ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:24 pm

DIN

ஆசிரியைகளின் பணிப் பதிவேடு மாயமானது தொடா்பாக பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலா்கள் இருவரை ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் வியாழக்கிழமை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி ஒன்றியம், நகரப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கான பணிப் பதிவேடு பண்ருட்டி வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு தலைமை ஆசிரியை, ஒரு ஆசிரியை ஆகியோரது பணிப் பதிவேடுகள் மாயமான நிலையில் 3 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையாம்.

எனவே, மாயமான பணிப் பதிவேடுகளை மீட்கக் கோரி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் மாவட்டச் செயலா் சிற்றரசு தலைமையில் வியாழக்கிழமை மாலை வட்டாரக் கல்வி அலுவலா்கள் இளஞ்செழியன், ராஜேஸ்வரியை அவா்களது அலுவலகத்தில் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.