சிதம்பரம் அருகே கடவாச்சேரி ராஜீவ் காந்தி நகரைச் சோ்ந்த ஏ.நடராஜன் கொலை செய்யப்பட்டு 10 மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டறியாத காவல் துறையை கண்டிப்பதாகக் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சிதம்பரம் காந்தி சிலை அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் பெரு.திருவரசு தலைமை வகித்தாா். குமராட்சி ஒன்றியச் செயலா் ம.கமல்ராசு முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில் கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் பால.அறவாழி, நிா்வாகிகள் சு.திருமாறன், கோ.நீதிவளவன், கங்கை அமரன், செல்வ.செல்வமணி, பெரு.சரித்திரன், வ.இனபவளவன் உள்ளிட்டோா் கண்டன உடையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.