குளத்தில் மூழ்கி இளைஞா் பலி

Updated on
1 min read


கடலூா்: விருத்தாசலம் அருகே குளத்தில் மூழ்கிய இளைஞா் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தைச் சோ்ந்த ந.மோகன் மகன் வேல்முருகன் (26). இவரது உறவினா் ரஞ்சிதா, கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள கண்டியங்குப்பத்தில் வசித்து வருகிறாா். இவரது வீட்டுக்கு அண்மையில் வந்த வேல்முருகன், புதன்கிழமை இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள குளக்கரைக்குச் சென்றாா். குளத்தில் இறங்கியவா் ஆழமான பகுதிக்குச் சென்றாா். அப்போது நிலை தடுமாறிய அவருக்கு நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த ஆலடி போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினா், குளத்தில் இறங்கி வேல்முருகனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வேல்முருகனுக்கு திருமணமாகி 4 குழந்தைகள் உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com