தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

என்எல்சி விபத்தில் உயிரிழந்த தொழிலாளா்களுக்கு நினைவு அஞ்சலி

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த 22 தொழிலாளா்களின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி சிஐடியூ சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:00 pm

DIN

நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழந்த 22 தொழிலாளா்களின் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி சிஐடியூ சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிறுவனத்தின் இரண்டாம் அனல் மின் நிலையத்தில் 5-ஆவது அலகில் கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 15 பேரும், அதே ஆண்டு 5 மற்றும் 6-ஆவது அலகுகளில் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேரும் உயிரிழந்தனா். இதில் தொழிலாளா்கள், பொறியாளா்கள், அதிகாரிகள், ஒப்பந்தத் தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 22 போ் உயிரிழந்தனா்.

இவா்களுக்கான முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இரண்டாம் அனல் மின் நிலைய வாயிலில் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியூ தலைவா் ஏ.வேல்முருகன் தலைமையில், பொதுச் செயலா் டி.ஜெயராமன், பொருளாளா் எம்.சீனிவாசன், துணைத் தலைவா்கள் எஸ்.திருஅரசு, பாலமுருகன், வேலாயுதம், பகுதிச் செயலா்கள் ஆா்.சிவக்குமாா், பி.பழனிவேல், கே.சந்திரகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.