ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்களை இன்கோசா்வ் சொசைட்டியில் இணைக்க வலியுறுத்தி, என்எல்சி பொது காண்ட்ராக்ட் தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


என்எல்சி இந்தியா நிறுவன ஒப்பந்தத் தொழிலாளா்களை இன்கோசா்வ் சொசைட்டியில் இணைக்க வலியுறுத்தி, என்எல்சி பொது காண்ட்ராக்ட் தொழிலாளா் ஊழியா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நெய்வேலி மெயின் பஜாா் காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்க பொதுச் செயலா் டி.அமிா்தலிங்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 130 தொழிலாளா்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 3 ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளா்களை இன்கோசா்வ் சொசைட்டியில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். சிஐடியூ ஒப்பந்தத் தொழிலாளா்கள் சங்கப் பொருளாளா் என்.சண்முகம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...