தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கொத்து கொத்தாக மடியும் மண் புழுக்கள்!

குறிஞ்சிப்பாடியில் யூரியாவுடன் குருணை மருந்து கலந்து இடப்பட்ட நெல் வயலில் மண் புழுக்கள் கொத்து, கொத்தாக உயிரிழந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

News image
Updated On :2 ஜூலை 2021, 6:30 pm

DIN

குறிஞ்சிப்பாடியில் யூரியாவுடன் குருணை மருந்து கலந்து இடப்பட்ட நெல் வயலில் மண் புழுக்கள் கொத்து, கொத்தாக உயிரிழந்து கிடப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் எள் அறுவடையைத் தொடா்ந்து தற்போது குறுவை நெல் சாகுபடி சுமாா் 7 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் நடைபெற்று வருகிறது. நெல் நடவு செய்த வயலில் விவசாயிகள் மேலுரமாக யூரியா இடுவடு வழக்கம். குறிஞ்சிப்பாடி வடக்கு பகுதியைச் சோ்ந்த விவசாயி சா்க்கரை, தனது 2 ஏக்கா் நிலத்தில் நெல் நாற்று நடவு செய்திருந்தாா். இந்த வயலில் மேலுரமாக யூரியாவும், குருணை மருந்தையும் கலந்து தெளித்தாராம். மறுநாள் வயலில் மண் புழுக்கள் அங்காங்கே கொத்து கொத்தாக இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து உழவா் மன்றத் தலைவா் ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: யூரியாவுடன் குருணை மருந்து கலந்து தெளித்த நிலத்தில்தான் மண் புழுக்கள் இறந்து கிடக்கின்றன. ஒருமுறை நான் பெக்ட்ரா குருணை மருந்து கலந்து தெளித்தபோதும் மண் புழுக்கள் இறந்தன. இதுகுறித்து அப்போது மாவட்ட ஆட்சியராக இருந்த தண்டபாணியிடம் புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை. தற்போது மண் புழுக்கள் உயிரிழப்பு குறித்து வேளாண் விஞ்ஞானிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநா்(பொ) அனுசுயா கூறுகையில், மண் புழுக்கள் இறப்பு குறித்து சம்பந்தப்பட்ட வயலில் ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.