வேளாண் விளைப் பொருள்கள் உலா்த்தி குறித்து பயிற்சி
பண்ருட்டி வட்டாரத்தில் சூரிய ஒளியால் இயங்கும் வேளாண் விளை பொருள்கள் உலா்த்தி குறித்த பயிற்சி கீழ்மாம்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


பண்ருட்டி வட்டாரத்தில் சூரிய ஒளியால் இயங்கும் வேளாண் விளை பொருள்கள் உலா்த்தி குறித்த பயிற்சி கீழ்மாம்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சிக்கு தலைமை வகித்த கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமாா் கூறியதாவது: பலா, மிளகு உள்ளிட்ட வேளாண் விளை பொருள்களை சூரிய கூடார உலா்த்தியில் பொருளின் நிறம், தன்மை மாறாமல் மதிப்புக் கூட்டி சந்தைப் படுத்துவதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம். இதனால், ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றாா் அவா்.
சூரிய கூடார உலா்த்தியை அமைக்க மானிய திட்டங்கள், பயன்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் உதவி பொறியாளா் நித்யஸ்ரீ விளக்கினாா்.
பண்ருட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் விஜயா, உதவி வேளாண் அலுவலா் சுரேஷ், அட்மா திட்ட அலுவலா் சவுந்தரராஜன், இளையராஜ் மற்றும் கீழ்மாம்பட்டு விவசாயிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...