பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

வடலூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 5:42 pm

DIN

வடலூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

வடலூா், பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரகு மனைவி லட்சுமி (30). அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் ஸ்டீபன்ராஜ் (23). இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், ஸ்டீபன்ராஜிடம் பேசுவதை லட்சுமி நிறுத்திவிட்டாராம். இதனால், இருவருக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, ஸ்டீபன்ராஜ் தாக்கியதில் பலத்த காயமடைந்த லட்சுமி, கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் ஸ்டீபன் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.