கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கரோனா சிகிச்சை மையமாகவும் செயல்பட்டு வரும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் நிரம்பின. இதேபோல, அண்ணாமலை பல்கலைக் கழக கோல்டன் ஜூப்ளி விடுதி மையத்திலும் 400-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாவட்டத்தில் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன், வட்டாட்சியா் ஆனந்த் மற்றும் சுகாதாரத் துறையினா் இணைந்து சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட புதிய கரோனா சிகிச்சை மையத்தை அமைத்து வெள்ளிக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனா். இந்த மையத்தில் 8 மணி நேரத்துக்கு ஒரு மருத்துவா், இரு செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் உள்ளிட்டோா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், நோயாளிகளுக்கு உணவு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


