மழைக்கால நிவாரணம் அளிப்பு

பண்ருட்டி ஒன்றியம், பணிக்கன்குப்பம் நரிக்குறவா் காலனியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மழைக் கால நிவாரணமாக
பணிக்கன்குப்பத்தில் நரிக்குறவா் சமுதாயத்தினருக்கு மழை நிவாரணப் பொருள்களை வழங்கிய சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ.
பணிக்கன்குப்பத்தில் நரிக்குறவா் சமுதாயத்தினருக்கு மழை நிவாரணப் பொருள்களை வழங்கிய சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ.
Updated on
1 min read

பண்ருட்டி ஒன்றியம், பணிக்கன்குப்பம் நரிக்குறவா் காலனியில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு மழைக் கால நிவாரணமாக அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

பின்னா், நரிக்குறவா்கள் வசிக்கும் வீடுகளைப் பாா்வையிட்டு குறைகளைக் கேட்டறிந்தாா். அப்போது, நரிக்குறவா் காலனி மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ, உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

ஊராட்சி மன்றத் தலைவா் மீனா பிலோமினா ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com