பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா தடுப்பூசி முகாம்: கடலூா் ஆட்சியா் ஆய்வு

கடலூா் மாவட்டத்தில் 9-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் 905 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் 9-ஆவது மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் 905 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வீடு, வீடாகச் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

பண்ருட்டி நகராட்சி, தட்டாஞ்சாவடி பகுதியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொகுதி எம்எல்ஏ தி.வேல்முருகன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தாா். பின்னா், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதேபோல, பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மாளிகம்பட்டு பகுதியில் வீடுதோறும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை நெய்வேலி தொகுதி எம்எல்ஏ சபா.ராஜேந்திரன் முன்னிலையில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

அப்போது, துணை இயக்குநா் (சுகாதாரம்) மீரா, மலேரியா அலுவலா் கெஜபதி, பண்ருட்டி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மாலினி, வட்டாட்சியா் பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.