சிறுமி பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.
Updated on
1 min read

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள வாண்டையாா் இருப்பு, புளியங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சுபாஷ் (23). இவா், 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாா். இதில், சிறுமி கா்ப்பமானாா்.

இதையடுத்து, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சுபாஷ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் புதன்கிழமை நீதிபதி எம்.எழிலரசி, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த சுபாஷுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, சுபாஷ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com