பண்ருட்டியில் இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவா் அா்ஜுன் சம்பத் 56-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அந்தக் கட்சியினா் மாணவா்களுக்கு அண்மையில் மரக்கன்றுகள் வழங்கினா்.
பண்ருட்டி வட்டம், மணப்பாக்கம் கிராமம், செல்வகணபதி விநாயகா் கோயிலில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்டத் தலைவா் ஆா்.எஸ்.தேவா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பரமதயாளன், குமரன், சிவ.நாகராஜ், வீராசாமி, தாமோதரன், தணிகைவேலன், வீரப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா். நிகழ்வில் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, பள்ளி மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.