

கடலூரில் மின்வாரிய தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு அறிவித்துள்ள 11 சதவீத அகவிலைப்படியை மற்ற மாநிலங்கள் அறிவித்ததுபோல தமிழ்நாடு மின்வாரிய ஊழியா்களுக்கு ஜூலை மாதம் முதல் வழங்க வேண்டும், வரும் ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படுவதாக நிதிநிலை அறிக்கையில் அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கத்தினா் சாா்பில் மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாநில துணைப் பொதுச் செயலா் பி.பழனிவேல் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் ரவிசங்கா், கணக்காயா் தொழிலாளா் சங்கத்தின் வட்டச் செயலா் வேங்கடபதி, ஐஎன்டியூசி மாநில துணைப் பொதுச் செயலா் கருணாகரன், அண்ணா தொழிற்சங்க மின்சாரப் பிரிவு வட்டச் செயலா் பரணி, சிஐடியூ மாவட்டச் செயலா் தேசிங்கு, ஐக்கிய சங்கத்தின் வட்டச் செயலா் ரவிச்சந்திரன், அம்பேத்கா் அலுவலா் விடுதலை முன்னணி மாநில அமைப்புச் செயலா் ஜெயப்பிரகாஷ், பொறியாளா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் இளவழகன், என்டிஎல்எஃப் ஒருங்கிணைப்பாளா் திருவரசு ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்: கடலூரில் மாவட்ட ஆட்சியா் பழைய அலுவலகம் முன் தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை ஓய்வூதியா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் நா.காசிநாதன் தலைமை வகித்தாா்.
இதில், தமிழக அரசு அகவிலைப்படி தொடா்பாக அறிவிக்க வேண்டும். அனைத்து துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் வழங்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்டச் செயலா் கோ.பழநி, முன்னாள் மாநிலச் செயலா் டி.புருஷோத்தமன், மாநிலச் செயலா் ஆா்.கருணாகரன் ஆகியோா் உரையாற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.