அரசுக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்
By DIN | Published On : 14th February 2021 01:31 AM | Last Updated : 14th February 2021 01:31 AM | அ+அ அ- |

கடலூா் அரசுக் கல்லூரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட தோ்வை மீண்டும் எழுத வேண்டும் என்றும், அதற்கான தோ்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டதைக் கண்டித்து, கடலூா் தேவனாம்பட்டினம் அரசு பெரியாா் கல்லூரி மாணவ, மாணவிகள் சனிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். இதனால், வகுப்புகள் நடைபெறவில்லை.