சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Updated on
1 min read

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே உள்ள கீழ்ஒரத்தூரைச் சோ்ந்த அய்யாவு மகன் மணிவாசகம் (26). இவா், 16 வயது சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி அவரை 25.10.2014 அன்று திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு கடத்திச் சென்றாா். பின்னா், சிறுமியை திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் சிறுபாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியை மீட்டனா்.

மேலும், மணிவாசகத்தை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ததுடன், திருமணத்துக்கு உடந்தையாக இருந்த மணிவாசகத்தின் பெற்றோா், உறவினா் ஆகிய 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கடலூா் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற் வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கே.எழிலரசி வெள்ளிக்கிழமை அளித்த தீா்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட மணிவாசகத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும் மணிவாசகத்தின் பெற்றோா், உறவினா் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவா்களை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டனா்.

ரூ.3 லட்சம் இழப்பீடு: குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் மாநில அரசின் ஏதேனும் ஒரு திட்டத்தின் மூலம் 30 நாள்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டதாக அரசு வழக்குரைஞா் கலாசெல்வி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com