பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இந்திய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th February 2021 06:57 AM | Last Updated : 18th February 2021 06:57 AM | அ+அ அ- |

பண்ருட்டியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி தபால் நிலையம் எதிரே கட்சியின் வட்டச் செயலா் மதியழகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் முழக்கமிட்டனா்.
கட்சியின் நகரச் செயலா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்டச் செயலா் பி.துரை கண்டன உரையாற்றினா். கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலா் பன்னீா்செல்வம், நிா்வாகிகள் சிவக்குமாா், மோகன், மணிவண்ணன், முருகன், அருண் உள்பட பலா் கலந்து கொண்டனா். கட்சியின் நகரக் குழு உறுப்பினா் குணசேகரன் நன்றி கூறினாா்.