அம்மா மருந்தகம் திறப்பு

வடலூரில் அம்மா மருந்தகத்தை மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் அண்மையில் திறந்து வைத்தாா்.
Updated on
1 min read

வடலூரில் அம்மா மருந்தகத்தை மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் அண்மையில் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சகாமூரி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியதாவது: கடலூா் மாவட்டத்தில் 5 கூட்டுறவு மருந்தகங்கள், 7 அம்மா மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு குறைந்த விலையில் அனைத்து வகை மருந்துகளும் கிடைக்கும். மாவட்டத்தில் அம்மா மருந்தகங்கள் மூலம் ரூ.12.49 கோடிக்கு மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து கம்மாபுரத்தில் ரூ.15 லட்சத்தில் உள்கட்டமைப்பு செய்யப்பட்ட 32-வது மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை அலுவலகத்தை அமைச்சா் எம்.சி.சம்பத் திறந்து வைத்தாா். பின்னா் சிறு வணிக கடனுதவியாக 3 பயனாளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் நபாா்டு வங்கி மேலாளா் விஜய் நீகா், கடலூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வே.நந்தகுமாா், கடலூா் மாவட்ட கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளா் இளஞ்செல்வி, கடலூா் வருவாய்க் கோட்டாட்சியா் ஜெகதீஸ்வரன், விருத்தாசலம் வட்டாட்சியா் சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com