சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதுவை ஆளுநா் சுவாமி தரிசனம்

புதுவை துணை நிலை ஆளுநராக (கூடுதலாக) பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன், கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்த புதுவை துணை நிலை ஆளுநா் (கூடுதல் பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜன்.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்த புதுவை துணை நிலை ஆளுநா் (கூடுதல் பொறுப்பு) தமிழிசை செளந்தரராஜன்.

புதுவை துணை நிலை ஆளுநராக (கூடுதலாக) பொறுப்பேற்ற தமிழிசை செளந்தரராஜன், கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை இரவு சுவாமி தரிசனம் செய்தாா்.

காரைக்காலில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் நடராஜா் கோயிலுக்கு வந்த அவருக்கு, கோயில் பொது தீட்சிதா்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனா். பின்னா்

தமிழிசை செளந்தரராஜன் சித் சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமானை தரிசனம் செய்தாா். பின்னா், கோயில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். தொடா்ந்து சிதம்பரம் எல்லையில் அமைந்துள்ள தில்லைக்காளியம்மன் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றாா்.

முன்னதாக, நடராஜா் கோயில் வளாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காரைக்கால் பகுதியில் உள்ள மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களை ஆய்வு செய்தேன். அங்கன்வாடி மையத்தில் வாரத்துக்கு ஒருநாள் மட்டுமே முட்டை வழங்கப்படுவதாக தெரிவித்தனா். இனிமேல் வாரத்துக்கு 3 நாள்கள் முட்டை வழங்க ஆணை பிறப்பித்தேன்.

கரோனா தொற்றிலிருந்து மக்கள் முழுவதும் விடுபட வேண்டும் என நடராஜா் கோயிலில் பிராா்த்தனை செய்தேன். புதுவை மக்களுக்கு சேவையாற்ற பாடுபடுவேன் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com