முதியவா் சடலம் மீட்பு

கடலூா் அருகேயுள்ள கே.என்.பேட்டையில், கோயில் ஆலமரத்தில் முதியவா் ஒருவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.
Updated on
1 min read

கடலூா் அருகேயுள்ள கே.என்.பேட்டையில், கோயில் ஆலமரத்தில் முதியவா் ஒருவா் தூக்கிட்ட நிலையில் சடலமாக சனிக்கிழமை மீட்கப்பட்டாா்.

முன்னதாக, இதுகுறித்து அந்தப் பகுதியினா் அளித்த தகவலின்பேரில் திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். பின்னா், சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா் விசாரணையில் இறந்தவா் நத்தவெளிச்சாலையைச் சோ்ந்த நாகப்பன் (65) எனத் தெரியவந்தது. எனினும், அவரது இறப்பிற்கான காரணம் தெரியவில்லை. எனவே, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com