சிதம்பரம் அருகேயுள்ள கோப்பாடி பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் நிழல்குடை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். குமராட்சி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் பூங்குழலி பாண்டியன் நிழல்குடையை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா்கள் சுந்தரமூா்த்தி, பாலகிருஷ்ணன், ஒன்றியக் குழு உறுப்பினா் வெற்றிச்செல்வி மணிமாறன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய இணைச் செயலா் இளஞ்செழியன், குமராட்சி கூட்டுறவு சங்கத் தலைவா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.