சிதம்பரம் அருகே குமராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட எள்ளேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக விலங்குகள் வழி பரவும் நோய்கள் தடுப்பு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மருத்துவா் ஜெரால்டு மேரி தலைமை வகித்தாா். வட்டார மருத்துவ அலுவலா் மங்கையா்கரசி முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கால்நடை மருத்துவா் சுஜாதா பங்கேற்று உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் வட்டார சுகாதார ஆய்வாளா்கள், பயிற்சி சுகாதார ஆய்வாளா்கள், கிராம செவிலியா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா். பொதுமக்களும், சுகாதாரப் பணியாளா்கள் விலங்கின நோய்களிலிருந்து பாதுகாப்பு சிகிச்சை தொடா்பாக உறுதிமொழியேற்றனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் எம்.கருணாநிதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.