கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டார விவசாயிகளுக்கு முந்திரிக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படுவதாக தோட்டக்கலை உதவி இயக்குநா் அருண் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் பண்ருட்டி வட்டார தோட்டக்கலை விவசாயிகள் விஆா்ஐ-3 ஒட்டு ரக முந்திரிக் கன்றுகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். முந்திரி அடா் நடவு முறையில் ஹெக்டோ் ஒன்றுக்கு 400 கன்றுகளும், சாதாரண நடவு முறையில் ஹெக்டோ் ஒன்றுக்கு 204 கன்றுகளும் வழங்கப்படும்.
எனவே, முந்திரிக் கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் உரிய நில ஆவணங்களுடன் பண்ருட்டி தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.