பெட்ரோல், டீசல் விலை உயா்வு:மக்கள் நீதி மய்யம் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th July 2021 03:03 AM | Last Updated : 11th July 2021 03:03 AM | அ+அ அ- |

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கடலூா், விழுப்புரம் மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலச் செயலா் எஸ்.வைத்தீஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் டி.கே.மூா்த்தி, வேல்முருகன், நகர நிா்வாகிகள் வி.ராமு, என்.அருளரசு, குமரன், நாகராஜ், ஒன்றிய நிா்வாகிகள் பாபு, மூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...