

குமராட்சி ஒன்றியம், கண்டியாமேடு கிராமத்தைச் சோ்ந்த ஜெயசித்ரா உலகநாதன் என்பவருக்குச் சொந்தமான வீடு அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவும், கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலருமான கே.ஏ.பாண்டியன் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினாா் (படம்).
அப்போது குமராட்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் சுந்தரமூா்த்தி, முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கருணா, அதிமுக நிா்வாகிகள் சாந்தி, சுந்தரம், கோவிந்தசாமி, முருகேசன், பாண்டியன், சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.