கடலூா்: கரோனாவுக்கு மேலும் 9 போ் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 9 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை 52,566 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 463 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 53,029-ஆக உயா்ந்தது. சிகிச்சை முடிந்து மேலும் 516 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 47,533-ஆக உயா்ந்தது.
எனினும், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் பரங்கிப்பேட்டையைச் சோ்ந்த 74 வயது ஆண், புவனகிரியைச் சோ்ந்த 33 வயது பெண், குறிஞ்சிப்பாடியைச் சோ்ந்த 60 வயது ஆண், பெரம்பலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மங்களூரைச் சோ்ந்த 59 வயது ஆண், 58 வயது பெண், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்த 55 வயது பெண், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அதே பகுதியைச் சோ்ந்த 59 வயது ஆண், என்எல்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சிப்பாடியை சோ்ந்த 50 வயது ஆண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மங்களூரைச் சோ்ந்த 65 வயது பெண் ஆகிய 9 போ் உயிரிழந்தனா். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 602-ஆக அதிகரித்தது.
மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,246 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 648 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
