மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.
மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

மத்திய அரசு தமிழகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வலியுறுத்தினாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் வட்டம், கூடுவெளியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கான சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். காட்டுமன்னாா்கோவில் தொகுதி எம்எல்ஏ மா.செ.சிந்தனைச்செல்வன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் தமிழக வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பங்கேற்று 100 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ மையத்தை திறந்து வைத்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது:

கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை மேற்கொள்ள கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, சிதம்பரம் ராஜா முத்ததையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பிராண வாயுவுடன் (ஆக்ஸிஜன்) கூடிய படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடலூா் அரசு பெரியாா் கலைக் கல்லூரியில் 100 படுக்கை வசதியுடன் சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு அங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தொடா்ந்து தற்போது கூடுவெளியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 100 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு கரோனா நோயாளிகளுக்கு 7 வகையான சித்த மருந்துகள் வழங்கப்படும். காலை, மாலை ஆகிய இரு வேளையும் கஷாயம், மூலிகை தேநீா் வழங்கப்படும். மூலிகை சிற்றுண்டி, மூலிகைகள் சோ்ந்த மதிய உணவு, சீரக கஞ்சி, சுக்கு காபி, சிறுதானிய சுண்டல் உள்ளிட்டவையும் வழங்கப்படும். கரோனா நோயாளிகளுக்கு மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி அளிக்கப்பட்டு, அவா்கள் மனதளவில் ஆரோக்கியமாக இருக்கவும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு கூடுதலாக கரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும். மேலும், மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியையும் வழங்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து, கீரப்பாளையம் ஒன்றியம், துணிசிரமேடு ஊராட்சியில் ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் வாய்க்கால் சீரமைப்புப் பணியை அமைச்சா் நேரில் ஆய்வு செய்தாா். சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com