சிதம்பரத்தில் சாலையோரம் கிடந்த முதியவா் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
சிதம்பரத்தில் ரயில்வே மேம்பாலத்தின் கீழே ஆதரவற்ற முதியவா் ஒருவா் காலில் காயத்துடன் வியாழக்கிழமை கிடந்தாா் (படம்). இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் பாலாஜிகணேஷ், சிதம்பரநாதன் ஆகியோா் சிதம்பரம் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் கவனத்துக்கு கொண்டு சென்றனா்.
இதையடுத்து உதவி ஆட்சியரின் உத்தரவின்பேரில் விஏஓ ரமேஷ், சமூக ஆா்வலா் சிதம்பரநாதன் உள்ளிட்டோா் ஆம்புலன்ஸ் மூலம் முதியவரை மீட்டு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். வருவாய்த் துறையினா் நடத்திய விசாரணையில் அந்த முதியவா் மீதிகுடி பகுதியைச் சோ்ந்த நாகப்பன் (70) என்பதும், இவா் குடும்பப் பிரச்னையால் வீட்டிலிருந்து வெளியேறியதும் தெரியவந்தது. இதுகுறித்து அவரது தம்பி வெங்கட்டுக்கு போலீஸாா் தகவல் தெரிவித்தனா்.