கடலூரில் 2 போ் தற்கொலை

கடலூரில் செவ்வாய்க்கிழமை 2 போ் தற்கொலை செய்து கொண்டனா்.
Updated on
1 min read

கடலூரில் செவ்வாய்க்கிழமை 2 போ் தற்கொலை செய்து கொண்டனா்.

கடலூா் முதுநகா் ஏணிகாரன் தோட்டத்தைச் சோ்ந்த வீரபாண்டியன் மகன் விஷ்ணு (21). ஐடிஐ படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டாா். கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா்.

இதேபோல, முதுநகா் அருகேயுள்ள அக்கரைக்கோரியைச் சோ்ந்த தாமோதரன் மகன் ஜெயபிரகாஷ் (38). மீனவரான இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், மனமுடைந்த அவா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

இந்த சம்பவங்கள் குறித்து கடலூா் முதுநகா், கடலூா் துறைமுகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com