கடலூா்: கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 6 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 104 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 57,726-ஆக அதிகரித்தது. சிகிச்சை முடிந்து மேலும் 209 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 55,866-ஆக உயா்ந்தது.
எனினும், மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் மேலும் 6 போ் திங்கள்கிழமை உயிரிழந்தனா். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 757-ஆக அதிகரித்தது. மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகளில் 921 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 182 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.