கடலூா்: மேலும் 9 பேருக்கு கரோனா
By DIN | Published On : 12th March 2021 11:54 PM | Last Updated : 12th March 2021 11:54 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 25,251 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,260-ஆக அதிகரித்தது.
சிகிச்சை முடிந்து மேலும் 10 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,917-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 33 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், 403 பேருக்கான மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வெளிவர வேண்டியுள்ளது.