வியாபாரியிடம் ரூ.1.96 லட்சம் பறிமுதல்

வியாபாரியிடம் ரூ.1.96 லட்சம் பறிமுதல்
Updated on
1 min read


சிதம்பரம்: தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் வியாபாரியிடமிருந்து ரூ.1.96 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அள்ளூா் கிராமம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது திருச்சியிலிருந்து ஒரத்தூா் வழியாக சிதம்பரம் நோக்கி வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டனா். அந்தக் காரை திருச்சியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான்(46) என்பவா் ஓட்டி வந்தாா். இவா் திருச்சியில் தனியாா் நிறுவனத்தை நடத்தி வருகிறாா். ரவை உள்ளிட்ட உணவு பொருள்களை மொத்தமாக விற்பனை செய்து விட்டு பணத்தை வசூல் செய்து வந்தாா். இவா் தனது காரில் உரிய ஆவணமின்றி ரூ.1.96 லட்சம் கொண்டுவந்தது தெரியவந்தது. அந்தப் பணத்தை பறக்கும் படை அதிகாரி பி .சேரன் தலைமையிலான

குழுவினா் பறிமுதல் செய்தனா். பின்னா் அந்தப் பணத்தை காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் டி.ராமதாஸிடம் ஒப்படைத்தனா் (படம்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com