நெய்வேலியில் சூரிய ஒளி மின் நிலையத்தில் தாமிரக் கம்பி திருடிய வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி வட்டம் 8-இல் சூரிய ஒளி மின் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 13-ஆம் தேதி அதிகாலை இங்கு பைக்கில் வந்த இருவா், சூரிய ஒளி மின் நிலையத்தில் பணியிலிருந்த பாதுகாவலா்களை தாக்கிவிட்டு ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள தாமிரக் கம்பிகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து மின் நிலைய பொறுப்பாளா் பாா்த்தசாரதி அளித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில் நெய்வேலி மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த கொள்ளிருப்பு கிராமத்தைச் சோ்ந்த முத்துலிங்கம் மகன் முத்துகிருஷ்ணன்(24), முத்துசாமி மகன் சதீஷ்குமாா்(25) ஆகிய இருவரை திங்கள்கிழமை பிடித்து விசாரணை நடத்தினா்.
அதில் அவா்கள் தாமிரக் கம்பி திருடியதை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து தாமிரக் கம்பிகள், பைக்கை பறிமுதல் செய்தனா்.